பாரம்பரிய வாகை மரச்செக்கு முறையில், மிகுந்த கவனத்துடன் தயாரித்த 100% தூய இயற்கை எண்ணெய்கள் மற்றும் மண்கட்டிய நாட்டு துவரம்பருப்பு.
பரம்பரைப் பரம்பரையாக மானாவாரிப் பயிர் (வானம் பார்த்த பூமி) விவசாயக் குடும்ப பின்னணியில் இருந்து வந்து முதல் தலைமுறை தொழில்முனைவராக உருவெடுத்திருக்கிறோம். விவசாயமே உணவு உற்பத்திதான். அதன் நீட்சியாக மரச்செக்கு எண்ணெய் & மண்கட்டிய நாட்டு துவரம்பருப்பு உற்பத்தித் தொழிலில் இறங்கியுள்ளோம்.
ஆண்டாள் — "பத்தோடு பதினொன்று; அவற்றுள் ஆண்டாள் தனி என்று ஊர்போற்ற விளங்க வேண்டும்" என்னும் நோக்கத்தில் 12/12/2018 தொடங்கப்பட்டு தரத்திலும், சுவையிலும் தனித்தன்மையுடன் பயணித்து வருகிறது. எண்ணெய் வித்துக்களை வெயிலில் நன்கு உலர்த்தி வாகை மரச்செக்கில் ஆட்டி, கசடுகளைத் தெளியவிட்டு சுகாதாரமான முறையில் பாட்டில்களில் நிரப்புகிறோம். 'உயர்ந்த தரம் – உரிய விலை' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகிறோம்.
"எங்களின் குழந்தைகளுக்கு ஒருபோதும் நஞ்சினை உணவாகக் கொடுக்க மாட்டோம். ஆண்டாள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எங்களின் குடும்பத்தினர்களே!"